சென்னை காசிமேட்டில் ரூ.60,000 மதிப்புள்ள மீன்கள் திருட்டு - பெண்கள் புகார்
Aug 14 2020 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை காசிமேட்டில் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மீன்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை கண்டுபிடிக்கக் கோரி மீனவப் பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். காசிமேடு சூரிய நாராயண சாலையில் அமைந்துள்ள மீன் விற்பனை கடையில், சரஸ்வதி, சற்குணம், இளமதி ஆகிய மூன்று பெண்களும் ஐஸ் பெட்டியில் மீன்களை வைத்து விட்டு சென்றுள்ளனர். அதிகாலையில் கடையில் நுழைந்த மர்ம நபர்கள் மீன்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காசிமேடு மீன்பிடித் துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.