ஊரடங்கு விடுமுறையில் விவசாயம் மேற்கொள்ளும் 6-ம் வகுப்பு மாணவன் - இயற்கை முறையில் விவசாயம் செய்து சாதனை
Aug 15 2020 10:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மன்னார்குடி அருகே, 11 வயது மாணவன், இயற்கை முறையில் விவசாயம் செய்து, அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளான்.
மன்னார்குடியை அடுத்த பைங்காநாடு கிராமத்தைச் சேர்ந்த சுதாகர்-அருள்மொழி தம்பதியினரின் 11 வயது மகன் கவின் கார்கி, தனது தங்கையுடன், இந்த விடுமுறையை பயன்படுத்தி, தங்களது பெற்றோரின் வழிகாட்டுதலோடு, இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். ஒரு ஏக்கர் நிலத்தில், வெண்டை, அவரை, நிலக்கடலை, எள், தர்பூசணி, கீரைகள் உள்ளிட்டவற்றை இயற்கை முறையில் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். இதனால் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் கிடைப்பதுடன், எஞ்சியவற்றை விற்பனை செய்து வருமானம் ஈட்டியும் வருகின்றனர். ஊரடங்கு விடுமுறையை, விவசாய பணிகளுக்கு செலவிடுவது தனக்கு உற்சாகத்தை அளிப்பதாக, மாணவன் கவின் கார்கி, மகிழ்ச்சி தெரிவித்துள்ளான்.