கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர் : பல துறைகளில் சாதனை புரிந்த நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன
Aug 15 2020 12:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் திரு. பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
74வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் நடைபெற்றது. கொரோனா காரணமாக விழாவில் பொதுமக்கள், மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. சமூக இடைவெளியுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் திரு. பழனிசாமி கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்தார். பின்னர், சுதந்திர தின உரையை முதலமைச்சர் ஆற்றினார். இதனை தொடர்ந்து பல துறைகளில் சாதனை புரிந்த நபர்களுக்கும், கொரோனா முன்கள பணியாளர்களுக்கும் தமிழக அரசின் விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்.