தமிழகத்தில் சுதந்திர தின விழா- மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மத்திய மாநில அரசு அலுவலகங்களில் தேசிய கொடியேற்றம்
Aug 15 2020 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையிலுள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றி, சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில கணக்காயர் அலுவலகத்தில், மாநில கணக்காயர் திரு.ஜெய்சங்கர் தேசியக் கொடியை ஏற்றினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் முதன்மை தலைமை ஆணையர் திரு.கர்மாகர், தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இதேபோன்று GST அலுவலகத்தில் , GST தலைமை ஆணையர் திரு.கிருஷ்ணாராவ் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், துறைமுக தலைவர் திரு.ரவீந்திரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், இந்தியன் ஆயில் நிறுவன தேர்கு மண்டல செயல் இயக்குநர் அருப் சிண்ஹா, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.