சுதந்திர தின விழாவையொட்டி, பாம்பன் ரயில் பாலத்தில், வெடிகுண்டு தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவினர் சோதனை
Aug 15 2020 12:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுதந்திர தின விழாவையொட்டி, பாம்பன் ரயில் பாலத்தில், வெடிகுண்டு தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முன்தினம் முதல், பாம்பன் ரயில் பாலத்தில், ஆயுதம் ஏந்திய போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வெடிகுண்டு தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு போலீசார், பாம்பன் ரயில் பாலம் முழுவதும், தீவிர சோதனை மேற்கொண்டனர். ரயில் பாலம் மற்றும் சாலை பாலத்தில் மீன் பிடிக்கவோ அல்லது தேவையின்றி மீனவர்கள் மற்றும் அந்நியர்கள் யாரும் வரக்கூடாது என, போலீசார் எச்சரித்துள்ளனர்.