கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கொரோனா ஊரடங்கால் வேலையின்றி வறுமையில் வாடிய இளைஞர் தற்கொலை
Aug 15 2020 12:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கொரோனா ஊரடங்கால் வேலையின்றி வறுமையில் வாடிய இளைஞர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் அருகே ஏழகரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர், விடுதி ஒன்றில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக வேலை இல்லாததால், சுப்பிரமணியன், தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வறுமையில் தவித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.