கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் ஆபத்தை எதிர்நோக்கும் கிராமம் - தடுப்புச்சுவர் அமைத்துதரக் கோரிக்கை

Aug 15 2020 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிதம்பரம் அருகே, கொள்ளிடம் ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்படுவதற்கு முன், தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டுமென, கிராம மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிதம்பரம் அருகேயுள்ள ஜெயங்கொண்டபட்டினம் கிராமம், புதிய கொள்ளிடம் ஆறு மற்றும் பழைய கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு, கொள்ளிடம் ஆற்றில், காவிரி உபரிநீர் திறந்து விடப்பட்டபோது, இந்த கிராமம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஆற்றின் கரை உடைந்து வெள்ளம் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டதால், பொதுப்பணித்துறை அலுவலர்கள், தற்காலிகமாக பனைமரம், மணல் மூட்டை உள்ளிட்டவற்றை வைத்து தடுப்புகள் அமைத்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தடுப்பு கட்டைகள் உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தால், கிராமமே மூழ்கும் அபாயம் ஏற்படக்கூடும். எனவே, ஆற்றின் கரை உடையாமல் தடுக்க, உடனடியாக தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டுமென, கிராம மக்கள், கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00