தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை : நாளை ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்
Aug 15 2020 12:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நாளை ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க ஞாயிற்றுக் கிழமை தளர்வில்லா முழுஊரடங்கை தமிழக அரசு நீடித்துள்ளது. நாளை 3-வது ஞாயிற்றுக் கிழமையையொட்டி ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பால் மற்றும் மருந்துக்கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஊரடங்கையொட்டி அத்தியாவசியப் பொருட்களை வாங்க இன்றும் மக்கள் குவிந்தனர்.