சென்னையில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 1,14,260 பேரில் ஒரு லட்சத்து 643 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்
Aug 15 2020 12:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 260 பேரில், ஒரு லட்சத்து 643 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் ஆயிரத்து 492 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொரோனா நோய்த்தொற்றுக்கு 2 ஆயிரத்து 408 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 260 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் ஒரு லட்சத்து 643 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 ஆயிரத்து 209 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளி மாநிலங்களைச் சேர்ந்த 161 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 59 புள்ளி நான்கு நான்கு சதவீத ஆண்களும், 40 புள்ளி ஐந்து ஆறு சதவீத பெண்களும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 745 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்றுக்கு 2 ஆயிரத்து 408 பேர் பலியாகியுள்ளனர்.
திருவொற்றியூரில் 296 பேரும், மணலியில் 125 பேரும், மாதவரம் மண்டலத்தில் 537 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 586 பேரும், ராயபுரம் மண்டலத்தில் 801 பேரும், திரு.வி.க நகரில் 623 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். அம்பத்தூரில் ஆயிரத்து 492 பேரும், அண்ணாநகர் மண்டலத்தில் ஆயிரத்து 160 பேரும், தேனாம்பேட்டையில் 659 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆயிரத்து 279 பேரும் வளசரவாக்கத்தில் 895 பேரும், சிகிச்சை பெறுகின்றனர். ஆலந்தூர் மண்டலத்தில் 619 பேரும், அடையாறு மண்டலத்தில் ஆயிரத்து 79 பேரும், பெருங்குடியில் 460 பேரும், சோழிங்கநல்லூரில் 437 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.