கொரோனா ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 146 நாட்களில் 9,66,998 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு

Aug 15 2020 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 146 நாட்களில் 9 லட்சத்து 66 ஆயிரத்து 998 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்‍கப்பட்டனர். அபராதமாக 20 கோடியே 53 லட்சத்து 51 ஆயிரத்து 588 ரூபாய் வசூலிக்‍கப்பட்டுள்ளதாக தமிழகக்‍ காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காக, தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அவசியமின்றி பொதுமக்‍கள் யாரும் வெளியில் நடமாடக்‍ கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும், சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது. ஆயினும், இதனைப் பொருட்படுத்தாமல் செல்பவர்கள் மீது போலீசார் நடவடிக்‍கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலுக்‍கு வந்த 146 நாட்களில் தடையை மீறியதாக 9 லட்சத்து 66 ஆயிரத்து 998 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்‍கப்பட்டனர். ஊரடங்கை மீறியதாக 8 லட்சத்து 75 ஆயிரத்து 100 வழக்‍குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 6 லட்சத்து 80 ஆயிரத்து 247 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அபராதமாக 20 கோடியே 53 லட்சத்து 51 ஆயிரத்து 588 ரூபாய் வசூலிக்‍கப்பட்டுள்ளதாக தமிழகக்‍ காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00