போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கணவர் மாயம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனைவி தீக்குளிக்க முயற்சி
Sep 18 2020 4:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் அருகே, போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கணவர் மாயமானதை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனைவி தீக்குளிக்க முயன்றார்.
கரூர் காந்திகிராமத்தைச் சேர்ந்த முரளி என்பவரும், சிவகிரியைச் சேர்ந்த பொன்காவியா என்பவரும், கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 10-ம் தேதி வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரிப்பதற்காக, காந்திகிராமத்தில் உள்ள முரளியின் சகோதரி ஹேமாவின் கணவர் அருண்குமாரை சிவகிரி போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். இரண்டு நாட்களாகியும் அருண்குமார் வீடு திரும்பவில்லை. சிவகிரி போலீசாரிடம் விசாரித்தபோது விசாரணையை முடித்து அருண்குமாரை அனுப்பி விட்டதாக கூறியுள்ளனர்.
இதனால் கணவரை மீட்டுத் தரக்கோரி, அருண்குமாரின் மனைவி ஹேமாவும்-தாயார் மோகனாம்பாளும், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றிய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.