முதலமைச்சர் வேட்பாளர் யார் என மீண்டும் வெடித்த மோதல் - இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். எதிரிலேயே தொண்டர்கள் எதிரும் புதிருமாக கோஷம்
Sep 18 2020 7:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் வேட்பாளர் யார்? என அதிமுகவில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இ.பி.எஸ். - ஒ.பி.எஸ். எதிரிலேயே, ஆதரவாளர்கள் எதிரும், புதிருமாக கோஷங்கள் எழுப்பியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சென்னையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, இருவரும் வந்தபோது, அவர்களது ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்றும், ஓ.பி.எஸ். தான் முதல்வர் வேட்பாளர் என்றும் மாறிமாறி கோஷங்கள் எழுப்பினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கட்சியில் யாரும் பேசக் கூடாது என்று ஏற்கெனவே ஒ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் சேர்ந்து அறிவித்தார்கள். ஆனால், அவர்கள் எதிரிலேயே, அவர்களது ஆதரவாளர்கள் மாறிமாறி கோஷங்கள் எழுப்பியது, கட்சியில் தலைமைக்கான மோதல் முற்றி வருவதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது.
ராணுவக் கட்டுப்பாட்டுடன் கட்சி இருக்கும் என தெரிவித்த இ.பி.எஸ்.சும், ஒ.பிஎஸ்.சும் மறைமுகமாக ஒருவருக்கு எதிராக ஒருவர் செயல்பட்டு, கட்சியின் கட்டுப்பாட்டை அவர்களே குலைத்து வருவதாக உண்மை தொண்டர்கள் மன வேதனையுடன் புலம்பித் தீர்த்தனர்.