தமிழகத்தில் ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 5,30,908-ஆக உயர்வு - இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,685-ஆக அதிகரிப்பு
Sep 18 2020 7:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5 ஆயிரத்து 488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இன்று 5 ஆயிரத்து 488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 908-ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில், கொரோனா வைரஸ் காரணமாக 67 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 685-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் ஒரேநாளில் 989 பேர், வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 616 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 5 ஆயிரத்து 525 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் குணமடைந்தனர்.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் இன்று ஒரேநாளில் 543 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் 288 பேருக்கும், செங்கல்பட்டில் 265 பேருக்கும் திருவள்ளூரில் 258 பேருக்கும் கடலூரில் 254 பேருக்கும் திருப்பூரில் 187 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 151 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.