கர்நாடக அணைகளில் நீர் திறப்பு எதிரொலி - மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
Sep 21 2020 10:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக அணைகளில் நீர் திறக்கப்பட்டதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கன மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று வினாடிக்கு 11 ஆயிரத்து 241 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 12 ஆயிரத்து 480 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.