கொரோனா நோய்த் தொற்றால் நாட்டின் பொருளாதாரம் மந்தகதியில் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் கருத்து - ஊரக வேலைவாய்ப்பு போல் நகர்புறத்திலும் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்க வலியுறுத்தல்
Sep 21 2020 11:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மந்த நிலையில் இருப்பதாகவும், இதனால், அரசின் கடன் சுமை அதிகரிக்கவே செய்யும் என்றும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். தமிழக பொருளாதார நிலை குறித்த அறிக்கையை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சரிடம் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு.ரங்கராஜன், கிராமப்புறங்களில் உள்ளதைப்போன்று, நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்புதிட்டம் தொடங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.