மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு - சென்னையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Sep 21 2020 12:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து, சென்னையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு, நாடு முழுவதும் எதிர்கட்சிகள், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சென்னை பாரிமுனையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற போராட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, சாலை மறியல் ஈடுபட்ட அவர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, கைது செய்தனர்.