அண்ணா பல்கலைகழக பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு - கருப்பு பேட்ஜ் அணிந்தபடி பணியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள்
Sep 21 2020 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக, இரண்டாக பிரிக்கும் சட்ட மசோதா கடந்த 16-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தற்போதைய அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை, அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்றும், புதிதாக பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க உருவாக்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு, அண்ணா பல்கலைக்கழகம் என்றும் பெயர் சூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து பணிகளைத் தொடங்கினர்.
இனி வரும் நாட்களில் கருப்பு பேட்ஜ் அணிந்தே பணியாற்ற உள்ளதாகவும், அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும், பேராசியர்கள் தெரிவித்தனர்.