நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வலியுறுத்தல் - தஞ்சையில் மண்டல அலுவலகம் முன்பு நெல்லை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Sep 21 2020 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வலியுறுத்தி, தஞ்சையில், நெல்லைக் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தஞ்சை மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து உடனடியாக அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மழை காரணமாக நெல்லை காய வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.