கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு இயந்திரங்களை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Sep 21 2020 4:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகரில் இருந்து கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனுப்பவுள்ள, வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகளை சரிபார்க்கும் பணியினை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு. கண்ணன் ஆய்வு செய்தார். கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வசந்தகுமார் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் வாக்குப் பதிவுக்குத் தேவையான கட்டுப்பாட்டு கருவிகள், மற்றும் வாக்குப்பதிவு அறியும் இயந்திரங்கள், நாளை கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.