திருவாரூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்
Sep 21 2020 4:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூரில், கள்ளக்காதல் விவகாரத்தில், கணவர் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து, மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருடைய மனைவி அருள்செல்விக்கும், பாபு என்பவருக்கும் இடையே, கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், மோகன்ராஜ் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.