மின்துறை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு - மத்திய அரசைக் கண்டித்து காரைக்காலில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Sep 21 2020 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மின்துறை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மின் துறையை தனியார் மயமாக்குவதாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.