தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு - கொரோனா அதிகரிப்பு சூழலில் நடைபெறும் தேர்வால் மாணவர்களுக்கு மன அழுத்தம்
Sep 21 2020 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு இன்று தொடங்கியது. கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில் தேர்வில் பங்கேற்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் நடத்தி வரும் நிலையில், தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய படிப்பு இறுதியாண்டு மாணவர்கள் தேர்வு மையங்களில் வந்து தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.