காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து உழைப்பாளர் உரிமை இயக்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் போராட்டம்
Sep 21 2020 4:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த ஒரகடம் பகுதியில் செயல்படும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் நான்கு தொழிலாளிகளை பணி நீக்கம் செய்ததை திரும்ப பெற வலியுறுத்தியும், 12 தொழிலாளர்களை பணி இடமாற்றம் செய்ததை ரத்து செய்யக்கோரியும், உழைப்பாளர் உரிமை இயக்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். தங்களுடைய கோரிக்கைகளை தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.