வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 1,66,408 பேர் விண்ணப்பம் - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
Sep 21 2020 5:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, 1 லட்சத்து 66 ஆயிரத்து 408 பேர் விண்ணப்பித்துள்ளதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும், நேற்று வரை, 5 லட்சத்து 51 ஆயிரத்து 408 விண்ணபித்துள்ளனர். இதில் புதிதாக பெயர் சேர்க்க, 1 லட்சத்து 66 ஆயிரத்து 408 பேர் விண்ணப்பித்துள்ளதாக திரு. சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். பெயர் நீக்குவதறகு 2 லட்சத்து 37 ஆயிரத்து 248 பேர் விண்ணபித்துள்ளதாகவும் கூறியுள்ளார். தமிழகத்தில் 56 ஆயிரம் இரட்டை பதிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை கணினி மூலமாக சரிபார்க்கும் பணிகள் மாவட்ட வாரியாக நடைபெற்று வருவதாக திரு.சாகு தெரிவித்தார்.