தமிழகத்தில் 5,344 பேருக்கு கொரோனா - இதுவரை 5,47,337 பேருக்கு வைரஸ் தொற்று - பலி எண்ணிக்கை 8,871 ஆக உயர்வு
Sep 21 2020 8:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 60 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 344 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக, தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்து 337-ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில், கொரோனா வைரஸ் காரணமாக 60 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 871-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று ஒரேநாளில் 982 பேர், வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 625 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 492 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 4 லட்சத்து 91 ஆயிரத்து 971 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் இன்று 648 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் 295 பேருக்கும், செங்கல்பட்டில் 219 பேருக்கும், திருவள்ளூரில் 212 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.