திருவேற்காட்டில் ஆளும்கட்சி முன்னாள் நகர மன்ற தலைவரை கொல்ல முயற்சி செய்த சிசிடிவி காட்சிகள் வெளியீடு
Sep 21 2020 8:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவேற்காட்டில் ஆளும்கட்சி முன்னாள் நகர மன்ற தலைவரை கொல்ல முயற்சி செய்த சம்பவத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அடுத்த கோலடியை சேர்ந்தவர் மகேந்திரன். நேற்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். திருவேற்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டினர். இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.