திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் கசிந்ததால் விவசாய நிலம் பாதிப்பு - நெற்பயிர்களும் சேதமடைந்ததால் உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
Sep 23 2020 1:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மாவட்டம் எருக்காட்டூர் பகுதியில் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் கசிந்ததால் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல எருக்காட்டூர் பகுதியை சேர்ந்த சிறு விவசாயியான திரு.தனசேகரன், தனது 2 ஏக்கர் நிலத்தில், நேரடி விதைப்பு மூலம் சம்பா நடவுப் பணியை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், அவரது விளைநிலத்தில், ஓ.என்.ஜி.சியால் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணெய் வயல் முழுவதும் பரவியது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயி திரு.தனசேகரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வயலில் பரவியுள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணிகளை ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.