தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு - காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உட்பட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தது சி.பி.சி.ஐ.டி
Sep 23 2020 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தட்டார்மடம் வியாபாரி செல்வன் கொலை வழக்கில், காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உட்பட 6 பேர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சொக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வியாபாரி செல்வன் என்பவரை கடந்த 17-ம் தேதி ஒரு கும்பல் கடத்தி படுகொலை செய்தது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் மூன்று குழுக்களாக பிரிந்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், செல்வன் கொலை தொடர்பாக தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அ.திமுக பிரமுகர் திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் மற்றும் முத்துராமராமலிங்கம், சின்னத்துரை, ராமர் ஆகிய 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.