சென்னையை சேர்ந்த மென்பொறியாளரிடம் போலி மொபைல் செயலி மூலம் ரூ.15 லட்சம் மோசடி - 2 பேர் கைது
Sep 23 2020 8:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையை சேர்ந்த மென்பொறியாளரிடம், போலி மொபைல் செயலி மூலம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்ததுடன், அவரை கடத்திச் சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரியைச் சேர்ந்த மோகன் என்பவரை, கல்யாண் மற்றும் பிரபாகரன் ஆகியோர், பணம் சம்பாதித்து தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் இணைத்துள்ளனர். பிறகு அது போலி என தெரியவந்ததை அடுத்து, அவர்களிடம் இருந்து தப்பிக்க சொந்த ஊருக்கு தப்பிச் சென்ற மோகனை, இருவரும் பணம் கேட்டு மிரட்டியதுடன், கடத்தியும் சென்றுள்ளனர். இதனால் பயந்து தன் வீட்டில் வைத்திருந்த 15 லட்சம் ரூபாயை மோகன் கொடுத்துள்ளார்.