அரக்கோணத்தில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை - கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்
Sep 23 2020 8:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் அருகே, இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையானவர், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கம்மவார் பேட்டை பகுதியைச் சேர்ந்த கோபால் என தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.