சென்னை மதுரவாயலில் சிறுவன், சிறுமியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த தந்தை - 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது
Sep 24 2020 9:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மதுரவாயலில் சிறுவன், சிறுமியை கொலை செய்து விட்டு 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மதுரவாயல் எம்எம்டிஏ காலனி பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பூட்டிய வீட்டில் ஐஸ்வர்யா பிரியதர்ஷினி சிறுமி மற்றும் ஜெயகிருஷ்பிரபு என்ற சிறுவன் ஆகியோரின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தைகளது தந்தை ரவி தலைமறைவானார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரவியை தேடி வந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை பெரியமேட்டில் உள்ள விடுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறையினர் விசாரணையில், மனைவி மகேஸ்வரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.