கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் நலமுடன் உள்ளார் - தேமுதிக தகவல்
Sep 24 2020 10:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் நலமுடன் உள்ளதாக அக்கட்சி தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.
தேமுதிக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திரு.விஜயகாந்த் 6 மாதத்துக்கு ஒருமுறை உடல்நல பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டதாகவும், உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திரு.விஜயகாந்த் பூரண நலத்துடன் உள்ளதாகவும் தேமுதிக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.