வாணியம்பாடி அருகே பாலாற்றின் கிளை ஆற்றில் மூழ்கி 14 வயது சிறுவன் உயிரிழப்பு
Sep 24 2020 10:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாணியம்பாடி அருகே பாலாற்றின் கிளை ஆற்றில் மூழ்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சலாமாபாத் பகுதியை சேர்ந்தவர் முகமத் சாத் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியிக் உள்ள பாலாற்றின் கிளை ஆற்றில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றபோது, மழை நீர் தேங்கிய பள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.