பெரம்பலூரில் பணியிட மாறுதல் கோரி 3 நாட்களாக போராடிய நிறைமாத கர்ப்பிணி : மீண்டும் இரூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கே மாற்றம்
Sep 24 2020 10:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூரில் பணியிட மாறுதல் கோரி 3 நாட்களாக போராடி வந்த சவிதா என்ற நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு பணியிட மாறுதல் வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தனக்கு பணியிட மாறுதல் அளிக்கப்படாமல் அலைழகழிக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் சவிதா பதிவிட்டிருந்தார். தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தா, மீண்டும் இரூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பணியிட மாறுதல் அளித்து உத்தரவிட்டார். ஒரு கர்ப்பிணி பெண்ணை மூன்று நாட்களாக அழைகழித்து பணி மாறுதல் உத்தரவை வழங்கியிருப்பது வெட்கப்பட வேண்டியது என சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.