மத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு : மாட்டு வண்டியில் வந்து மனு அளித்த விவசாயிகள்
Sep 24 2020 10:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டி விவசாயிகள் மாட்டு வண்டியில் வந்து கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். விவசாயிகளைப் பாதிக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டியில் தேசிய விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தேசிய விவசாயிகள் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர், மாட்டு வண்டியில், வந்து கோட்டாட்சியர் திருமதி.விஜயாவிடம் மனு அளித்தனர்.