அரியலூரில் நகைக்கடை ஒன்றின் சுவரை துளையிட்டு 50 பவுன் நகை கொள்ளை
Sep 25 2020 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூரில் நகைக்கடை ஒன்றின் சுவரை துளையிட்டு, 50 பவுன் நகையை மர்மநபர்கள், கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சின்னகடைவீதியில் உள்ள பிரபல நகைக் கடையை அதன் உரிமையாளர் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் இன்றுகாலை அவரது கடைக்கு அருகில் தேங்காய்கடை வியாபாரம் செய்துவரும் ராமலிங்கம் என்பவர் தனது கடையை திறந்துபார்த்தபோது, சுவரில் துளையிட்டு நகைகடைக்குள் சிலர் சென்றதற்கான அடையாளம் தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். ராமலிங்கம் தந்த தகவலின்பேரில் நகைகடை உரிமையாளர் சௌந்தரராஜன் கடையை திறந்து பார்த்தபோது ஷோகேஷில் வைத்திருந்த 50பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.