தஞ்சையில் ஆவின் மேலாளருக்கு கத்திகுத்து - காவலர் கைது
Sep 25 2020 1:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை அருகே பணி நிமித்தம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் ஆவின் மேலாளர் கத்தியால் குத்தப்பட்டார். தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காவலராக பணியாற்றிய அன்புநாதன், வேலைக்கு சரியாக வரவில்லை எனக் காரணம் கூறி, நிறுவன மேலாளர் திருமுருகன் அவரை பணியிடை நீக்கம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அன்புநாதன், திருமுருகனை கத்தியால் தாக்கியுள்ளார்.