ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சக்கர வாகனத்தை திருடிய நபர் கைது
Sep 25 2020 1:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற முதியவர் கைது செய்யப்பட்டார். குமரேசன், என்பவர் தனது இருச்சக்கர வாகனத்தை சாலையில் நிறுத்தி விட்டு நண்பருடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த முதியவர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமரேசனும், அவரது நண்பரும் விரட்டிச் சென்று முதியவரை பிடித்து விசாரித்தபோது, அவர் வத்ராப் பகுதியை சேர்ந்த குருநாதன் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.