காந்த குரலால் ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்து வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார் - சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

Sep 25 2020 2:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

தனது காந்தக்‍ குரலால் ரசிகர்களின் உள்ளங்களில் வாழும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்று காலமானார். அவரது மறைவு உலக மக்‍களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

பின்னணி பாடகர் திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 5-ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில், சில நாட்களாக திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. எனினும் அனைத்து உயிர்காக்‍கும் உபகரணங்கள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்‍கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. நேற்று இரவு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அவரைக்‍ காப்பாற்ற மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இன்று காலை எஸ்.பி.பி.​யின் மனைவி சாவித்ரி, மகள் பல்லவி, மகன் சரண், சகோதரி ஷைலஜா ஆகியோர் மருத்துவமனைக்‍கு வந்தனர். நெருங்கிய நண்பர்களும் மருத்துவமனைக்‍கு வந்திருந்தனர். இந்த நிலையில், தந்தையின் மறைவை, மகன் சரண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00