செங்கல்பட்டில் இளம் பெண் மர்மமான முறையில் மரணம் - கணவன் கொலை செய்திருக்கலாம் என பெற்றோர் புகார்
Sep 25 2020 2:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டில் இளம் பெண் மர்மமான முறையில் மரணம் தொடர்பாக, கணவன் கொலை செய்து இருக்கலாம் என பெண்ணின் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.முருகேசனார் தெருவை சேர்ந்த ஜெகன், குடிபோதையில் தினமும் மனைவி ஹேமாவதியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹேமாவதி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கும், பெற்றோருக்கும் ஜெகன் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு, வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.