மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மக்களை குழப்பக்கூடாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி
Oct 24 2020 2:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் மக்களை குழப்பக்கூடாது என்று அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் இலவசமாக அனைவருக்கும் போடப்படும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இதனை விமர்சனம் செய்த கமல்ஹாசன், இல்லாத தடுப்பூசிக்கு பொல்லாத வாக்குறுதியா? எனக் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், திரு. கமல்ஹாசனின் கருத்து ரைமிங்காக சினிமாவில் பேச நன்றாக இருக்குமே தவிர, அரசியலுக்கு நன்றாக இருக்காது என்று திரு. கடம்பூர் ராஜு கூறயுள்ளார்.