ஹிந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என்று அறிவிப்பதா என, மத்திய பா.ஜ.க. அரசுக்கு வைகோ கண்டனம்
Oct 24 2020 2:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹிந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என்று அறிவிப்பதா என, மத்திய பா.ஜ.க. அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நல்வாழ்வுத்துறையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள 13 ஆயிரம் பணியிடங்களுக்கு இந்தி அவசியம் என்றும், இந்தி தெரியாதவர்கள் தேர்வு எழுத முடியாது என்றும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை, மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என திரு. வைகோ வலியுறுத்தியுள்ளார்.