வேலூர் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் இருந்த சந்தனமரம் மர்ம நபர்களால் கடத்தல் - போலீசார் தீவிர விசாரணை
Oct 24 2020 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் டி.ஐ.ஜி. அலுவலகத்தில், சந்தன மரம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர், திருவண்ணாமலை மண்டலத்துக்கான டி.ஐ.ஜி அலுவலகம், வேலூர் ரவுண்டானா பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு பசுமையை ஏற்படுத்தும் பல்வேறுவிதமான மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில், இங்குள்ள சந்தன மரத்தை இரவில் வெட்டியெடுக்க வந்த மர்ம நபர்கள், இரண்டு மரங்களை வெட்டிவிட்டு ஒன்றை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். பாதுகாப்பு வளையத்தில் உள்ள டிஜஜி அலுவலகத்தில் சந்தன மரம் வெட்டப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.