நீலகிரி மாவட்டம், உதகை நகரக்கழகச் செயலாளர் S. ரமேஷின் தாயார் மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்
Oct 24 2020 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம், உதகை நகரக்கழகச் செயலாளர் திரு.S. ரமேஷின் தாயார் திருமதி M. பஞ்சமணி மறைவுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நீலகிரி மாவட்டம், உதகை நகரக்கழகச் செயலாளர் திரு.S. ரமேஷின் தாயார் திருமதி. M. பஞ்சமணி, உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை திரு.டிடிவி தினகரன் தெரிவித்துக்கொண்டுள்ளார்.