எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - இணையதளம் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ள ஏற்பாடு
Oct 28 2020 12:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட்டது. அந்த வகையில் தேர்வை எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்றும், நாளையும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
'எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு முடிவு காலை 11 மணிக்கும், பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பிளஸ்-1 துணைத்தேர்வு முடிவு நாளை காலை 11 மணிக்கும் வெளியிடப்படுகிறது. மறுகூட்டல், விடைத்தாள் நகலுக்கு அடுத்த மாதம் 3, 4-ந் தேதிகளில் பதிவு செய்யலாம். மாணவர்கள் http://dge.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.