இராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மாவட்ட புதிய நிர்வாகிகளை அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நியமனம்
Oct 28 2020 5:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் நியமனம் செய்துள்ளார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இராமநாதபுரம், கோவை கிழக்கு, திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றிய மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி, வார்டு கழக செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகர் தெற்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் பகுதி சார்பு அணிகளின் செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.