மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை முறைகேடு புகார் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - மருத்துவ இடங்களை பணம் கொடுத்து வாங்கும் மாணவர்களால் சமூகத்துக்கு ஆபத்து எனவும் கருத்து

Oct 28 2020 2:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த, டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி, தங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்க கோரி, மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி, சந்தோஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி திரு. ஆனந்த் வெங்கடேஷ், தகுதி இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்குவதை தொடர அனுமதித்தால், அது தகுதியான மாணவர்களுக்கு அநீதி இழைப்பதற்கு சமம் என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களையும் புள்ளி விவரங்களையும் பார்க்கும்போது, கல்லூரிகள் வசூலித்த பணம் எவ்வளவு என்ற விவரங்கள் வெளிச்சத்திற்கு வரும் என தெரிவித்தார். மேலும், இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த தமிழக டி.ஜி.பி-க்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விசாரணை குறித்த அறிக்கையை ஜனவரி 30ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதிக்‍கு ஒத்திவைத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00