கரூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.6.50 கோடி மோசடி - பாதிக்கப்பட்ட மக்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
Oct 28 2020 2:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில், போலி நகைகளை அடகு வைத்து ஆறரை கோடி ரூபாய் மோசடி செய்த தேமுதிக ஒன்றியச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம், கிராம மக்கள், மனு அளித்தனர். தரகம்பட்டியில் நகைக்கடை நடத்தி வரும் தேமுதிக ஒன்றியச் செயலாளர் சிவம் ராஜேந்திரனும், அவரது மனைவியும், அதே பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரின் பெயரில், வங்கியில் போலியாக கணக்கு தொடங்கி, போலி நகைகளை அடகு வைத்து, ஆறரை கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், வங்கி கடன் வசூல் தீர்ப்பாயம், சம்பந்தப்பட்ட 109 நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மக்கள், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.