அரியலூரில் தீயணைப்பு துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
Oct 28 2020 3:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூரில், தீயணைப்பு துறை சார்பில், கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணியை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் அம்பிகா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மார்க்கெட் வீதியில் தொடங்கிய பேரணி, செந்துறை ரோடு, அரியலூர் புறவழிச்சாலை வழியாக அரியலூர் வட்டாட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில், தன்னார்வலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.