திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
Oct 28 2020 3:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கிரிவலம் செல்ல தடை விதித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஐப்பசி மாத பௌர்ணமி, வரும் வெள்ளிக்கிழமை மாலை 6.41 மணிக்கு தொடங்கி, மறுநாள் சனிக்கிழமை இரவு 8.45 மணிக்கு நிறைவடைவதாக, திருக்கோயில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பெளர்ணமி தினத்தன்று பக்தர்கள் கிரிவலம் செல்ல, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, 8ஆவது முறையாக தடை விதித்துள்ளார். எனினும், வழக்கம்போல் சிறப்பு வழிபாடுகள் மட்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.